இஸ்லாமிய மதத்தை அவமதித்தமைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த ஞானசார தேரர் , தன்னை பிணையில் விடுவிக்ககுமாறு கோரி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்தகொழும்பு மேல் நீதிமன்றம் அவரை 5000 ரூபாய் பணம் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இஸ்லாம் மதத்தை அவமதித்தமைக்காக ஞானசார தேரருக்கு நீதிமன்றம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக