புதன், 19 பிப்ரவரி, 2025

இந்தி மொழியை புகட்டுவது கட்டாயமெனில் ஒழிப்பதும் கட்டாயம்-மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.

 மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்பத் திராவிடத்தில் இந்திமொழியே - நீ இட்டஅடி வெட்டப்படும்

இந்திமொழியே துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!

எம்மிடத்திலே! அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில் உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் .

இலங்கையில் நியமிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலைத் திருத்தும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத...