வியாழன், 17 அக்டோபர், 2024

நைஜீரியா பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்து – 140 பேர் பலி

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை (16), நெடுஞ்சாலையில் செல்லும்போது, குறித்த பௌசர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பாடுகின்றது. 

விபத்தினால் பௌசரில் இருந்து கசிந்து வெளியேறிய . பெற்றோலை அங்கிருந்த மக்கள் சேகரிக்க முற்பட்ட போது அதிக எண்ணிக்கை மக்கள் கூடியதனால் , பௌசர் தீப்பிடித்து எரிந்தமையினால் 140 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 நைஜீரியாவில் சரக்கு புகையிரதப் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளமையினால் , வீதி மார்க்கமாக பௌசர்களில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுவதனால் அடிக்கடி இவ்வாறு விபத்துகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

மலையக தொழிலாளர்களுக்கு 2,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்!

நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் தற்ப...