இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், உலகில் ஏற்படும் எந்தவொரு யுத்தத்தின் போதும் மனிதநேயத்தின் கொடியை முன்னெடுத்துச் செல்லும் தேசம் இலங்கைத் தேசம் என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
உலகில் எவ்வளவு வளர்ந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து மக்களையும் பேதமின்றி, பரிவுணர்வுடன் நடத்தும் ஒரு அரசாக மாற்றுவதில் இந்நாட்டு சிறுவர்களும் பெண்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் மகளிர் தின நிகழ்வில் ஜனாதிபதி கூறினார்.
தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது.
அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர்.
இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்காதது குறித்து டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரித்து வருவதாக கருதப்படும் நிலையில், ஸ்பெயின் பிரதமரின் இந்த நிலைப்பாடு தனித்துவமானதாகவும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.
அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாவது, சான்செஸ் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு மிகத் தீவிரமான அல்லது வித்தியாசமான கொள்கை அல்ல. இருப்பினும் தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலானவை ட்ரம்பின் நிலைப்பாட்டை பின்பற்றுகின்றன
என்ற கருத்து நிலவி வருவதால், ஸ்பெயின் எடுத்துள்ள இந்த நிலைமையே முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
சர்வதேச அரசியல் சூழ்நிலையில் அமெரிக்கா–ஐரோப்பா உறவுகள், மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள பதற்றங்கள் ஆகியவை தொடர்ந்து உலக அரசியலில் முக்கியமான விவாதமாக இருந்து வருகின்றன.
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்மோஸ் நீரிணை பகுதியை கப்பல்கள் கடக்க ஈரான் தடைவிதித்துள்ளது.
அந்த வழியாக சென்ற பல எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது.
ஒரு பீப்பாய்க்கு 9 விழுக்காடு விலை உயர்ந்து 93 அமெரிக்க டாலரானது. மேலும் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போரால் வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை இரு நாட்களில் நிறுத்தக் கூடும் என கத்தார் தகவல் அளித்துள்ளது.
இதனிடையே ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் கச்சா எண்ணெய் விலை, அடுத்த 3 வாரங்களுக்குள் $150 வரை உயரக்கூடும் என கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத்-அல்-காபி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நேற்று நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் $85ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஈரானின் மிக முக்கியமான உள்நாட்டு விமான நிலையமாகவும் கருதப்படும் இந்த மெஹ்ராபாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பல விமானங்கள் நின்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் இருந்து பெரும் புகைமூட்டம் கிளம்பியுள்ளதுடன், அது தொடர்பான பல வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தின் பல இடங்கள் எதிரிகளின் இலக்காகியுள்ளதை ஈரானிய அரச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் 4ஆம் திகதியும் இஸ்ரேல் இந்த விமான நிலையத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியிருந்தது.
அதன்போது ஹெலிகொப்டர் உற்பத்திப் பிரிவு உட்பட இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், இன்றைய புதிய தாக்குதலில் விமான நிலையத்தின் எந்தப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று (07) டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவுகளின்படி, துபாய் விமான நிலையத்திற்கு மேலாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலக்குகள் மீது தினசரி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், சர்வதேச போக்குவரத்தில் உலகின் பரபரப்பான விமான நிலையமான டுபாயின் பிரதான விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
இது குறித்து டுபாய் ஊடகப் பிரிவு (Dubai Media Office), எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் இடைமறித்து அழிக்கப்பட்ட சிதைவுகள் வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவம்" என விவரித்துள்ளதுடன், அதே பதிவில் விமான நிலையம் குறித்து பரவி வரும் ஏனைய செய்திகளை மறுத்தும் உள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து போர் வெடித்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் நான்கு ஊழியர்கள் காயமடைந்ததுடன், ஒரு முனையமும் சேதமடைந்தது.
அந்தச் சம்பவம் "விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது" என்று துபாய் விமான நிலைய அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர்,
இருப்பினும் மேலதிக விவரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.
ஈரானியத் தாக்குதல்கள் அபுதாபி விமான நிலையம், பாம் ஜுமேரா (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் (Burj Al Arab) ஆடம்பர ஹோட்டல் ஆகிய இடங்களையும் தாக்கியுள்ளன.
அத்துடன் செவ்வாய்க்கிழமை டுபாயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ட்ரோன் சிதைவுகள் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் போர் கோரிக்கை தொடர்பான இங்கிலாந்து பாதுகாப்பு கூட்டத்திலிருந்து கசிவு 'முற்றிலும் அழிவுகரமானது' என்று முத்திரை குத்தப்பட்டது.தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) கூட்டத்திலிருந்து தகவல்களை கசியவிடுவது "முற்றிலும் செயலற்றது மற்றும் அழிவுகரமானது" என்று ஹாரியட் ஹர்மன் கூறியுள்ளார்.
அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற தொழிலாளர் கட்சி கூட்டங்களில் அடிக்கடி விளக்கங்கள் இருந்தாலும், NSC நடத்திய உயர் ரகசிய பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடுவது "சிவப்புக் கோடாக இருக்க வேண்டும்" என்று முன்னாள் தொழிலாளர் துணைத் தலைவர் கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்குவதற்கு சற்று முன்னும் பின்னும் நடைபெற்ற NSC விவாதங்களின் நெருக்கமான விவரங்களை தி ஸ்பெக்டேட்டர் வெளியிட்ட பிறகு, ஸ்கையின் தேர்தல் செயலிழப்பு பாட்காஸ்டில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில், சர் கெய்ர் ஸ்டார்மர் அரசியல் காரணங்களுக்காக பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்கவும் ஆனால் எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட் தலைமையிலான நான்கு அமைச்சரவை அமைச்சர்களால் தடுக்கப்பட்டார் என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முந்தைய நாள் அமெரிக்கா ஒரு முறையான கோரிக்கையை விடுத்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் தற்காப்பு நோக்கங் அதற்காக ஒப்புக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை "குறிப்பிட்ட முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை" என்று சர் கெய்ர் கூறியிருந்தாலும், அரசாங்கம் அந்தக் கதையை மறுக்கவில்லை, எனவே இது 2019 க்குப் பிறகு மிகவும் ரகசியமான NSC விவாதங்களின் முதல் கசிவு என்று தெரிகிறது.