இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் தீவிரமடைந்து வரும் ஆயுத மோதல்கள், தற்போது பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
எல்லையோரக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக, அப்பகுதிகளில் வாழும் சிவிலியன்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற மனிதாபிமான அமைப்புகள் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்த மோதல்களினால் லெபனானில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் குறிப்பாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாரிய உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
மக்களின் குடியிருப்புகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற சிவிலியன் உட்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்துள்ளதோடு, உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி வருகின்றன.
போர் வலயங்களில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசரத் தேவையாக உள்ளது.
தற்போதைய கள நிலவரங்களின்படி, உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகள் குறித்த தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, நேற்று (25.04.2026) இரவு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்கள் பொதி செய்யப்பட்டிருந்த இரட்டை அடிப்பகுதிகளைக் கொண்ட பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருள் மற்றும் ஹாஷிஷ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஒவ்வொரு பிக்குகளும் தலா ஐந்து கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருளை தமது பயணப் பொதிகளில் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த குழுவினர் ஏப்ரல் 22 ஆம் திகதி முகவர் ஒருவரால் வழங்கப்பட்ட விமானப்பயணச் சீட்டுக்கள் மூலம் பாங்காக் சென்றிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சிவில் உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளில் இருந்து ஆதாரங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகக் கருதப்படுவதுடன், பாரிய போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது.
டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் மிக மோசமான விபத்து நொடிப் பொழுதில் தவிர்க்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுவிஸ் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து அதிர வைப்பதாக இருக்கிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், இதில் 6 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மற்ற பொது போக்குவரத்துக்களை விட விமான போக்குவரத்து உச்சபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது. இதனால் விமானங்களில் விபத்துகள் என்பது மிக அரிதாகவே ஏற்படும். இருப்பினும், விபத்து ஏற்படும்போது, அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் அவை சர்வதேச அளவில் கவனம் பெறும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இன்று நடந்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுவிஸ் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் திட்டமிட்டபடி புறப்பட இருந்த நிலையில், ஒரே நொடியில் மோசமான விபத்து நடந்துள்ளது.
இதனால் டெல்லி ஏர்போர்ட்டில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திற்குப் புறப்பட வேண்டிய LX147 என்ற சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 1:08 மணியளவில் ஓடுபாதையில் வேகமாகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் டேக்-ஆஃப் செய்யத் தொடங்கிய சில நொடிகளில், அதன் ஒரு என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
சரியான நேரத்தில் தீயைக் கவனித்த விமானிகள், உடனடியாக விமானத்தை ஓடுதளத்திலேயே நிறுத்தினர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒருவேளை தீயைக் கவனிக்காமல் அவர்கள் டேக் ஆஃப் செய்திருந்தால் மிக மோசமான விபத்து ஏற்பட்டிருக்கும். இருப்பினும், விமானிகள் துரிதமாகச் செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட பிறகு, விமானத்தில் இருந்த 228 பயணிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்டோர் அவசரக்கால பாதைகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், அவசரக்கால ஸ்லைடுகளில் இறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .
இந்த கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பது யார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறத.ு
அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்தச் சம்பவத்தில் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிபர் ட்ரம்ப், பாதுகாப்புப் படையினரின் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டியதோடு, “நிகழ்ச்சி தொடரட்டும்” என்று தான் பரிந்துரைத்த போதிலும், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அதிகாரிகள் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த அவர், விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும், ரத்து செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சி அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ட்ரோன்கள், விண்வெளி பொறியியலில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கின்றன.
இவை குறிப்பாகத் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் வளிமண்டல ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் வளிமண்டலத்தின் அடுக்கு மண்டலத்தில் இயங்குகின்றன.
இது நீண்ட காலத்திற்குப் பல்வேறு உணர்விகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை நிலைநிறுத்த ஒரு நிலையான தளத்தை வழங்குகிறது.
மாதக்கணக்கில் நீடிக்கும் இந்த விமானங்களின் பயணத்திற்கு சூரிய சக்தி உந்துதல் அமைப்புகளே முக்கிய உந்துசக்தியாக உள்ளன. இவை பகல் நேரத்தில் சூரிய ஆற்றலைச் சேமித்து, விமானத்தை இயக்குவதற்கும், இரவு நேர இயக்கத்திற்காக உள் பேட்டரிகளை மின்னேற்றம் (Charge) செய்யவும் பயன்படுத்துகின்றன.
மேகங்களுக்கு மேலே இருப்பதால், தடையின்றி சூரிய ஒளியைப் பெற்று, கிட்டத்தட்ட முடிவில்லாமல் பறக்க இந்தச் சுழற்சி வழிவகுக்கிறது.
20 கிலோமீட்டர் உயரத்தில் செயல்படுவது, இந்த ட்ரோன்களை வணிக ரீதியான விமானப் போக்குவரத்தை விட மிக உயர்ந்த வளிமண்டலப் பகுதியில் நிலைநிறுத்துகிறது. இந்த உயரம் பெரிய புவியியல் பகுதிகளைக் கண்காணிப்பதற்கான பரந்த பார்வையை வழங்குகிறது.
இது குறைந்த காலதாமதம் மற்றும் குறைந்த செலவில், ஒரு "போலி-செயற்கைக்கோளாக" திறம்படச் செயல்படுகிறது.
இத்தகைய தொழில்நுட்பத்தின் பயன்கள் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மீட்பு ஒருங்கிணைப்பு மற்றும் கடல் எல்லை கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இவை குறிப்பிட்ட ஒரு பகுதியில் மாதக்கணக்கில் நிலைத்திருக்க முடியும் என்பதால், பாரம்பரிய செயற்கைக்கோள்கள் அல்லது குறுகிய தூர ட்ரோன்களால் வழங்க முடியாத தொடர்ச்சியான தரவுகளை இவை வழங்குகின்றன.
மிகக் குறைந்த எடையுள்ள கார்பன்-ஃபைபர் பொருட்கள் மற்றும் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட சூரிய மின்கலங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இந்த அதீத உயரங்களில் தொடர்ந்து பறப்பதற்கு அவசியமானவை.
மேல் வளிமண்டலத்தில் காணப்படும் கடுமையான வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் கதிர்வீச்சைத் தாங்கும் வகையில், மின்னணு சாதனங்கள் மற்றும் பேட்டரி அமைப்புகளின் நீடித்துழைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக மாநில முழுவதும் நடைபெற்றது இதில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்கு செலுத்தினர்.
கடந்த தேர்தல்களை விட 2026 சட்டமன்ற தேர்தலில் தான் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானது. இதற்காக 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவியது சுமார் 935 அரசியல் கட்சியில் உள்ள 423 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
எஸ் ஐ ஆர் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு பின்னர் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இரண்டு ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டு அதனை தேர்தல் ஆணையம் நீக்கியது.
அதன் பிறகு நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு சதவீதம் 85 புள்ளி 15 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. மொத்தமாக நான்கு புள்ளி என்று கேட்டு கோடி வாக்காளர்கள் மட்டுமே தங்களுடைய ஜனநாயக கடமையாற்றியுள்ளனர்.மீதமுள்ள 80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்த நிலையில் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டது.
மேலும் தேர்தல் பறக்கும் படையினர் திரும்ப பெறப்பட்டு உள்ளனர். வாகன சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளன மறு வாக்குப்பதிவு தொடர்பாக எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை .வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும், அது தொடர்பான துல்லியமான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடப்படவில்லை .
இது குறித்து தமிழக தேர்தல் அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது வாக்கு பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமிருந்தும் படிவம் 17 சி சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் இதற்கு என தனி பதிவேடு பராமரிக்கப்படுகிறது அதில் ஒவ்வொரு வாக்காளர்களும், எந்த அடையாளத்தை பயன்படுத்தி வாக்களி வாக்களித்துள்ளார்கள் என்பது குறித்த விபரமும், எத்தனை ஆண் வாக்காளர்கள், எத்தனை பெண் வாக்காளர்கள், எத்தனை மூன்றாம் பாலினத்தவர்கள் ,வாக்கு செலுத்தி உள்ளனர் என்ற துல்லியமான புள்ளி விபரங்கள் அந்த கோப்பில் இடம்பெற்றிருக்கும்.
இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் அதிகாரி முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களுக்கு துணை ராணுவ படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரைகின்றனர்.
வரும் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது .
அமெரிக்க-ஈரான் மோதலுக்கு மத்தியில், உயர்மட்ட அதிகாரிகளுடனான உயர்மட்ட சந்திப்புகளுக்காக அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் வந்தடைந்துள்ளார். பதட்டங்களைத் தணிப்பதற்கும், சாத்தியமான போர் நிறுத்தம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான வழிகளை ஆராய்வதற்குமான முயற்சிகளில் இஸ்லாமாபாத் ஒரு முக்கிய மத்தியஸ்தப் பாத்திரத்தை வகிக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.