அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய ஆட்சியை "அழித்துவிட்டதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார், அமெரிக்கா "போரில் அதிக வெற்றி பெற்றது" என்று கூறுகிறார்.
குர்திஷ் படைகள் தரைவழி படையெடுப்பை வழிநடத்தும் திறனை நிராகரிக்கும் அதே வேளையில், அமெரிக்க தரைப்படைகளை நிறுத்துவதை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை.
ஈரானில், புரட்சிகர காவல்படை இன்னும் ஆறு மாதங்களுக்கு "குறைந்தபட்சம்" போராட முடியும் என்று சமிக்ஞை செய்துள்ளது. ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் அந்நாட்டு ஜனாதிபதி மன்னிப்பு கேட்டு, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தாக்குதல்கள் தொடங்கப்படாவிட்டால் அவர்களைத் தாக்க மாட்டோம் என்று சபதம் செய்தார்.
ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) தாக்குதலில் ஒரு மிகப்பெரிய தர்மசங்கடமான தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், ஈரானின் உண்மையான விமானங்களை அழிப்பதற்குப் பதிலாக, தரைப்பரப்பில் வரையப்பட்டிருந்த வெறும் ஓவியங்கள் (Painted Decoys) மீது குண்டுமழை பொழிந்துள்ளன. செயற்கைக்கோள் பார்வையில் உண்மையான விமானங்கள் போலவே தோற்றமளிக்கும் வகையில், மிகக் குறைந்த செலவில் ஈரானியப் படைகள் வரைந்த இந்த ஓவியங்கள், அமெரிக்காவின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வீணடித்துள்ளன.
நவீன போர்க்களத்தில் வெறும் தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பலம் மட்டும் போதாது,
எதிரியைத் திசைதிருப்பும் நுணுக்கமான திட்டமிடலே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை ஈரான் இதன் மூலம் நிரூபித்துள்ளது.
அமெரிக்கா தனது தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறி வரும் நிலையில், ஈரானின் இந்த 'வரைபடத் தந்திரம்' (Deception Tactic) குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஆன்லைன் மோசடியில் பல கோடி ரூபாய் இழந்ததாக சிலர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், மோசடி பணத்தை போலி வங்கி கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய ராமநாதபுரம் புல்லங்குடி பகுதியை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் பிரதீப், போகலூரை சேர்ந்த அப்ரின், சேது பாண்டியன், சல்மான் கான், சத்திரக்குடியை சேர்ந்த தவமுருகன், முகேஷ்வரன், பரமக்குடியைச் சேர்ந்த ஆசிக் சமூதீன் ஆகியோரது வீடுகளில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர்.
இவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 7 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து சென்னை சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், உலகில் ஏற்படும் எந்தவொரு யுத்தத்தின் போதும் மனிதநேயத்தின் கொடியை முன்னெடுத்துச் செல்லும் தேசம் இலங்கைத் தேசம் என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
உலகில் எவ்வளவு வளர்ந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து மக்களையும் பேதமின்றி, பரிவுணர்வுடன் நடத்தும் ஒரு அரசாக மாற்றுவதில் இந்நாட்டு சிறுவர்களும் பெண்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் மகளிர் தின நிகழ்வில் ஜனாதிபதி கூறினார்.
தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது.
அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர்.
இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்காதது குறித்து டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரித்து வருவதாக கருதப்படும் நிலையில், ஸ்பெயின் பிரதமரின் இந்த நிலைப்பாடு தனித்துவமானதாகவும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.
அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாவது, சான்செஸ் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு மிகத் தீவிரமான அல்லது வித்தியாசமான கொள்கை அல்ல. இருப்பினும் தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலானவை ட்ரம்பின் நிலைப்பாட்டை பின்பற்றுகின்றன
என்ற கருத்து நிலவி வருவதால், ஸ்பெயின் எடுத்துள்ள இந்த நிலைமையே முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
சர்வதேச அரசியல் சூழ்நிலையில் அமெரிக்கா–ஐரோப்பா உறவுகள், மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள பதற்றங்கள் ஆகியவை தொடர்ந்து உலக அரசியலில் முக்கியமான விவாதமாக இருந்து வருகின்றன.
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்மோஸ் நீரிணை பகுதியை கப்பல்கள் கடக்க ஈரான் தடைவிதித்துள்ளது.
அந்த வழியாக சென்ற பல எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது.
ஒரு பீப்பாய்க்கு 9 விழுக்காடு விலை உயர்ந்து 93 அமெரிக்க டாலரானது. மேலும் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போரால் வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை இரு நாட்களில் நிறுத்தக் கூடும் என கத்தார் தகவல் அளித்துள்ளது.
இதனிடையே ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் கச்சா எண்ணெய் விலை, அடுத்த 3 வாரங்களுக்குள் $150 வரை உயரக்கூடும் என கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத்-அல்-காபி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நேற்று நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் $85ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.