அமெரிக்காவின் 22 கோடி வாக்காளர்களின் விவரங்களை சீனா விலை கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், தனக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை எழுத, அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சீனா பெருமளவில் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிட உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்க தேர்தல் அமைப்பில் ஊடுருவி 22 கோடி வாக்காளர்களின் தரவுகளை திருடி வைத்துள்ளதாவும் இது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தல் தரவுத் திருட்டு என்றும் குறிப்பிட்டார்.
இந்த தரவு கசிவு அமெரிக்க தேர்தல் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவின் இந்தத் தரவு மோசடியை மூடிமறைக்க. அப்போதைய அரசின் சில உறுப்பினர்கள் முயன்றனர். இப்போதும் நமது நாட்டின் தேர்தல் அமைப்புவெளிப்படைத்தன்மையற்றதாகவும் துல்லியமற்றதாகவும் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக