புதன், 1 ஜூலை, 2026

பேலியகொடவில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பேலியகொட, களனி பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்துள்ளதால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இன்று காலை வேலை நேரத்தின் போது இந்த லொறி பழுதடைந்ததன் காரணமாக, கொழும்பிற்குள் நுழையும் பிரதான வீதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. 

போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், பழுதடைந்த லொறியை வீதியிலிருந்து அகற்றுவதற்கும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks