வியாழன், 18 ஜூன், 2026

தெல்தெனிய காரொன்றிலிருந்து மருத்துவ பெண் சடலம்.

தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த உடலியக்க மருத்துவர் ஒருவர் காரொன்றிலிருந்து இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


 இந்த சடலமானது தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று (17) புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலிகம - குருந்து கொரட்டுவ - பலல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண், தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள தங்குமிடமொன்றிற்கு நேற்று முன்தினம் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.அந்தப் பெண்ணின் சடலத்தை காதலன் அன்றைய தினம் இரவே காரொன்றிலிருந்து ஏற்றி, நேற்று காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, குறித்த விடுதியிலிருந்து இரவு 10:30 மணியளவில் பெண்ணை தூக்கிச் சென்று காரொன்றில் ஏற்றி செல்லும் செயல்களைச் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

பின்னர் காதலனே தெல்தெனிய காவல்துறையினருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இத்தகவலை வழங்கியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.சந்தேகிக்கப்படும் காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ள போதிலும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks