சனி, 20 ஜூன், 2026

சுரேஷ் சலேவின் பயனற்ற உண்ணாவிரதம்!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே, வாய்வழியாக மட்டுமே உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவர் பிற வைத்திய முறைகள் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள மறுக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் எவராலும் இவ்வளவு நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், முன்னாள் புலனாய்வுத் தலைவரின் இந்த முயற்சி ஒரு பயனற்ற செயல் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks