இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் காட்டம் தனது முகநூல் பக்கத்தில் கடுமையான விமர்சனப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“தயவுசெய்து செருப்பைக் கொச்சைப்படுத்தாதீர்கள் – ஏனெனில் செருப்பைவிடக் கீழான நிலையில்தான் இவர் இருக்கிறார்.
இவர் பைத்தியமுமில்லை, முட்டாளுமில்லை; மாறாக மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அரசியலை வணிகமாகச் செய்யும் வியாபாரியே ஆவார்.
இவர் சுயமாக இயங்கவில்லை; வேறு சக்திகளால் இயக்கப்படுகிறார். மிஞ்சியிருக்கும் தமிழ் இனத்தின் எதிர்காலத்தை அழிப்பதற்கும், இனப்படுகொலைக்கான நீதிக் கோரிக்கையை முறியடிப்பதற்குமே இவரது நடவடிக்கைகள் அமைகின்றன.
தமிழர்களை உலகுக்கு முன்னால் கோமாளிகளாகக் காட்டுவதில் இவர் வெற்றி பெற்றுவிட்டார்.
பொது வாழ்வில் அநாகரிகமான மொழியைப் பயன்படுத்துவது, ஒழுக்கக்குறைவான நடத்தைகளைக் காட்டுவது போன்றவற்றை எதிர்காலத் தலைமுறைக்கு முன்மாதிரியாகக் காட்டி தவறான பாடம் கற்பிக்கிறார்.
உயரிய சபைகளில் அவதூறும் அருவருப்பான பேச்சும் பேசியும் எந்தவித ஒழுக்காற்று விசாரணையும் இவருக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை.
ஏனெனில் இவரைப் போன்றவர்களால்தான் சர்வதேச விசாரணையைக் கோரும் தமிழ் சமூகம் மேலும் சீரழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இவரது நாடகம் இன்னும் முடியவில்லை.
மாகாண சபைத் தேர்தலுக்கு முன் மீண்டும் மக்களை ஏமாற்ற வருவார், ஆனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சேகரித்த செல்வத்துடன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்துவிடுவார்.
மக்கள் விழிப்புடன் சிந்திக்காவிட்டால் இனத்தின் மீது எஞ்சியிருக்கும் மதிப்பும் கவுரவமும் முற்றிலும் அழிந்துவிடும். முடிந்தால் உண்மையான அரசியல் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரை அணுகி உண்மையை அறியுங்கள்.”
இந்த வலுவான கருத்துப் பதிவும் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக