அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (15) காலை 6:00 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 104 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக