சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி மீண்டும் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தமை தொடர்பில் எழுந்த பாரிய சந்தேகங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 3-ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த கைதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய சில மணிநேரங்களிலேயே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் மீண்டும் பிடிக்கப்பட்டு சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டார். மீண்டும் பிடிக்கப்பட்ட பின்னர் திடீரென நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் கைதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி தப்பியோடிய போது அல்லது மீண்டும் பிடிபட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த மரணம் தொடர்பில் பொரளை காவற்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகத்தின் பேரில் மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைதிக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்துப் பொரளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இலங்கையின் சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மரணங்கள் அண்மைக்காலமாக மனித உரிமை அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தப்பியோடிய ஒரு கைதியை மீண்டும் பிடிக்கும் போது சட்ட ரீதியான நடைமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனும் விதிமுறை உள்ள நிலையில், இச்சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
உயிரிழந்த கைதியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே, அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது இயற்கை மரணமா என்பது உறுதி செய்யப்படும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக