புதன், 8 ஏப்ரல், 2026

யாழ் -அனலைதீவில் ஆயுதங்கள் மீட்பு.

யாழ் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.


 அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர் துப்பரவு செய்த வேளை துப்பாக்கி , அவற்றுக்கான இரண்டு மகசீன்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை கண்டு அது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்திருந்தார். 

 அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா் அவற்றினை அடையாளப்படுத்தி, அவற்றினை மீட்பதற்கு அனுமதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks