சனி, 4 ஏப்ரல், 2026

உயர்தரத்தில் 3A பெற்ற யாழ் இந்துக் கல்லூரி மாணவன் திடீர் மரணம்!

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - இணுவிலைச் சேர்ந்த 19 வயதான லவன் அக்சயன் என்பவரே இன்று (04.04.2026) காலை இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


திடீர் உடல்நலக்குறைவு (காய்ச்சல், வாந்தி) காரணமாக இன்று அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3ஏ சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம்பிடித்துச் சாதித்திருந்தார்.

சிறந்த பொறியியலாளராக வர வேண்டும் என காத்திருந்த இந்த மாணவனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks