வெள்ளி, 27 மார்ச், 2026

தலைமறைவான அமெரிக்க படையினர்!

ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தளங்களில் இருந்த அந்நாட்டு படையினர், தங்களது முகாம்களில் இருந்து வெளியேறி, ஹோட்டல்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அந்த அறிக்கைகளில், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைக் குறிப்பிட்டு, நிலத்தில் செயல்படும் படைத்துறையினர் பலரும் தற்போது தூரத்திலிருந்து பணியாற்றி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், போர் விமானங்களை இயக்கும் விமானிகள் மற்றும் அவற்றை பராமரிக்கும் குழுக்கள் மட்டுமே நேரடியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), அவர்களின் புதிய தங்கும் இடங்களை கண்டறிய பொதுமக்கள் தகவல் வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

அத்தோடு, அமெரிக்க ராணுவம் பொதுமக்கள் வாழும் இடங்களில் படையினரை தங்க வைப்பதன் மூலம், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks