இந்த விமானம் Boeing KC-135 Stratotanker வகையைச் சேர்ந்தது. அதன் வால் இறக்கையில் சேதம் ஏற்பட்டிருப்பது புகைப்படங்களில் தெளிவாக தெரிகிறது.ஆனால் இந்த சேதம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.வியாழக்கிழமை ஈராக்கில் விபத்துக்குள்ளான மற்றொரு KC-135 விமானத்துடன் இதற்கு தொடர்பு உள்ளதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 வழங்கிய தரவுகளின்படி, அந்த விமானம் முதலில் ஜோர்தான் வான்பரப்பில் பறந்த பின் இஸ்ரேலை நோக்கி சென்றுள்ளதாக தெரியவருகிறது.
விமானம் விமான நிலையத்தை அடைவதற்கு முன் பல முறை வட்டமிட்டு பறந்ததாகவும் பின்னர் அதன் கண்காணிப்பு தகவல் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக