மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நீதவான் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவினர் இந்த முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நிலப்பகுதியைச் சமப்படுத்தும் பணிகளின் போது மனித எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, இந்தப் பகுதி மனிதப்புதைகுழியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அகழ்வின் மூலம் கண்டெடுக்கப்படும் எச்சங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தகவல்களுடன் ஒப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குருக்கள்மடம் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், கடந்த காலப் போர்க்காலச் சம்பவங்கள் குறித்த பல உண்மைகளை வெளிக்கொணரலாம் என்பதால் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றது.
அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, தரை மட்டத்திலிருந்து சில அடி ஆழத்தில் மனித எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எலும்பு எச்சங்களுடன் சிதைவடைந்த நிலையில் சில துணித் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன, இவை தடயவியல் சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக