வெள்ளி, 20 மார்ச், 2026

ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி மூடப்பட்டது!

ஜெருசலேமில் அமைந்துள்ள புனித அல்-அக்ஸா மசூதியில், இந்த ஆண்டு ஈகைத் திருநாள் தொழுகை நடத்துவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் திடீர் தடை விதித்துள்ளனர். 

1967 ஆம் ஆண்டிற்கு பின்னர், மசூதி வளாகம் தொழுகையாளர்கள் இன்றி முழுமையாக மூடப்படுவது இதுவே முதல்முறையாகும். பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, கடந்த 20 நாட்களாகவே இந்த புனிதத் தலம் மூடப்பட்டிருந்தது. 

இன்று பெருநாள் தினத்திலும் மசூதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், பாலஸ்தீன மக்கள் வீதிகளில் நின்று கண்ணீருடன் தொழுகை நடத்தினர். மசூதி வளாகம் அமைதியாக காணப்படும் இந்த காட்சிகள், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks