முதற்கட்ட பணிகள்: மயானத்தை நவீனமயமாக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, மயான முகப்பு வளைவு மற்றும் இளைப்பாறு மண்டபம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
தலைமை: இந்த நிகழ்வுக்கு வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் திரு. சோமசுந்தரம் சுகிர்தன் தலைமை தாங்கினார்.
கலந்து கொண்டவர்கள்: இந்நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை செயலாளர் திரு. சி. சிவானந்தன், பிரதேச சபை உறுப்பினர் திரு. ஆ. உதயசங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னெடுப்பு: இந்த அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆ. உதயசங்காின் ஏற்பாட்டிலும், மாவைப் பாரதி சனசமூக நிலையத்தின் ஒழுங்கமைப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக