சனி, 15 நவம்பர், 2025

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் மையத்தை உக்ரைன் இராணுவம் தாக்குதல்!


ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டாவது மிகப் பெரிய  எண்ணெய் மையத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், அங்குள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் விநியோகிக்கும் மிகப் பெரிய குழாய்கள் ஆகியவை சேதமாக்கப்பட்டு அந்த எண்ணெய் மையம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு ஏவுதளத்தின் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நெப்டியூன் மற்றும் ஃபிளாமிங்கோ ஏவுகணைகள் மூலம் ரஷியாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ரஷ்யாவின் போருக்கு உதவும் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது அதிகாலை ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks