சனி, 18 அக்டோபர், 2025

இஷாரா செவ்வந்தி விசாரணையில் வெளிவரும் மர்மங்கள்!

தெற்கில் பேசுபொருளாக மாறியுள்ள “இஷாரா செவ்வந்தி”யிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி எனும் இளம் பெண்ணுக்கு நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய அனைத்து வசதிகளையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விடயங்கள் தெற்கை மையமாக கொண்டு அமைந்திருந்தாலும் கூட, குறித்த குற்றச் செயல்களுக்கு உடந்தையானவர்களில் யாழைச் சேர்ந்தவர்களின் பின்னணி அதிர்ச்சியான விடயங்களை வெளிப்படுத்துகிறது. 

கலாச்சாரம், பண்பாடு, கல்வி ஆகிய மூன்றிலும் பல தசாப்தங்களாக புகழ்பூத்து விளங்கிய யாழ்ப்பாணம் தற்போது குற்றச் செயல்கள், போதைப்பொருள் பாவனை, ஆட்கடத்தல் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகி கிடக்கும் அவல நிலையை அடைந்துள்ளது. 

யாழில் ஒருபுறம் குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரிக்க சிங்கள இராணுவமே காரணம் என விரல் நீட்டி பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அதையும் தாண்டி, பண ஆசை மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக்கல் போன்ற விடயங்களில் நம்மவர்கள் திசை திரும்ப சில தமிழர் தரப்புக்களும் உடந்தையாக இருப்பது வேதனைக்குரியதே. 

இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே பாய் எனப்படும் கெனடி பெஸ்டியனின் ஆட்கடத்தல் வலையமைப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks