செவ்வாய், 8 ஜூலை, 2025

கல்னேவ பொலிஸ் சீருடையில் கொள்ளையர்கள்!

போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கொள்ளையர்கள் குறித்த வீட்டிற்கு சென்று, அங்கு சோதனையிடுவதாக கூறி வீட்டினுள் நுழைவது அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகியிருந்தது. இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த சந்தேகநபர்கள் வந்த வேனை சுற்றி வளைத்த நிலை​யில், கொள்ளையர்கள் சிசிரிவி பதிவு சாதனம் என்று நினைத்து மற்றொரு சாதனத்துடன் தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக கல்னேவ பொலிசார் நடத்திய விசாரணையில், சந்தேக நபர்கள் வந்த வேனுடன் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

அமெரிக்க வரி குறித்து இலங்கை வர்த்தக சம்மேளம் அறிக்கை.

அமெரிக்க தீர்வை வரி குறித்து இலங்கை வர்த்தக சம்மேளம் அறிக்கை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்திருந்த 44...