நேற்றும் இந்த 48 மணிநேர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்றுவரும் நிலையில் வதிவிட உரிமை அற்ற தமிழ்மக்கள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
தொடருந்துகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது அதிரடியான சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்த நடவடிக்கையில் 4,000 க்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்ர் புருனோ ரீடெய்ல்யூ தெரிவித்துள்ளார்.
தமிழ் வணிக நிலையங்கள் அதிகம் உள்ளதும் தமிழர்கள் அதிகம் நடமாடும் பகுதியுமான லா சப்பல் பகுதிக்கு அண்மையில் உள்ள பிரான்சின் வடபிராந்தியத்துக்கு தொடருந்துகள் அதிகம் செல்லும் கார்த் நோட் தொடருந்து நிலையப்பகுதியிலும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த மாதம் சட்டவிரோத குடியேறிகளை பிடிக்கும் வகையில் நடத்தபட்ட இரண்டு நாட்களுக்குரிய நடவடிக்கையில் 750 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து நேற்றும் இந்த 48 மணிநேர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக