செவ்வாய், 10 ஜூன், 2025

தையிட்டியில் வந்து இறங்கும் சிங்கள காடையர்கள் !

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் (10.06.25) செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அப்பகுதியில் பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர், தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை முதல் , காணி உரிமையாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வரையில் நடைபெறவுள்ளது இந்நிலையில் விகாரைக்கு தெற்கில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பேருந்துக்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...