அப்பகுதியில் பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்,
தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை முதல் , காணி உரிமையாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வரையில் நடைபெறவுள்ளது
இந்நிலையில் விகாரைக்கு தெற்கில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பேருந்துக்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக