செவ்வாய், 24 ஜூன், 2025

போதைப்பொருள் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்!!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் வரும் ஜூலை 7ம் தேதி வரை நீதிபதி உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ேமலும், அவர் மூலம் போதைப்பொருள் வாங்கியதாக ‘மச்சான்ஸ்’ நடிகை, மேலும் ஒரு நடிகை, நடிகரும் சிக்குகிறார்கள். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட 3 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, பிரசாத் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பிரசாத் ‘தீங்கிரை’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். இதனால் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு கொக்கைன் என்ற போதைப் பொருளை அடிக்கடி பிரசாத் வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழினப் படுகொலை ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் !!!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுத...