வெள்ளி, 20 ஜூன், 2025

வலிகாமம் தெற்கு பிரதேச சபை தமிழரசு வசமானது!

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனும் முன்மொழியப்பட்டார். 

பகிரங்க வாக்களிப்பில் நடைபெற்ற தவிசாளர் தெரிவில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனுக்கு ஆதரவாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 6 உறுப்பினர்கள் என மொத்தமாக 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர். இதன் அடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தொலைபேசி பயனர்கள் செய்தி அறிவிப்புகளை முடக்கும் அபாயம் .

இது நவீன வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாறிவிட்டது - மில்லியன் கணக்கான தொலைபேசிகள் ஒரே நேரத்தில் ஒலிக்கின்றன அல்லது எச்சரிக்கை ஒலிக்கின்றன, ஏனெனி...