திங்கள், 2 ஜூன், 2025

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லை என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் தனியாக பேசி கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி ‘பாலியல் தொந்தரவு’ செய்தார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, அளித்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி ஞானசேகரனை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஓரிரு நாளிலேயே இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. போலீஸ் துணை கமிஷனர்கள் சினேக பிரியா, ஐமன் ஜமால், பிருந்தா ஆகிய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு புலனாய்வு குழு’ ஒன்று நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஞானசேகரன் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை பெற்றது.

பிறகு ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அதேநேரம் ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த அன்று செல்போனில் வேறு யாரிடமாவது பேசினரா, என்பது குறித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்யும் வகையில் ஞானசேகரனை கடந்த பிப்ரவரி 6ம் தேதி தடயவியல் அறிவியல் துறை அலுவலகத்தில் ஆஜர்படுத்தி ஞானசேகரனிடம் 3 மணி நேரம் குரல் மாதிரி சோதனை நடத்தினர்.

அப்போது கடந்த டிச. 23ம் தேதி மாலை 6.29 மணிக்கு மேல் இரவு 8.52 வரையில் ஞானசேகரன் மாணவியை மிரட்டும் வகையில் செல்போனை ‘பிளைட் மோடில்’ தான் வைத்திருந்தது அறிவியல் பூர்வமான ஆய்வு மூலம் உறுதியானது என்று தடயவியல் அறிவியல் துறை அறிக்கை அளித்தது.

சிறப்பு புலனாய்வு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலன் உள்பட 24 பேர் அளித்த வாக்குமூலம் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 60 நாட்களில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பாலியல் தொடர்பான வழக்கில் தங்களது முழு விசாரணையை நடத்தி முடித்து, பிப்ரவரி 24ம் தேதி 100 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...