நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
டெல்லி தமிழ்நாடு மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஜனவரி 1 முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது," எனக் கூறப்பட்டுள்ளது.
அதோடு, கொரோனா பரவலில் கேரளா, 1,435 பேருடன் முதலிடத்தில் உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 506, டெல்லியில் 483, குஜராத்தில் 338, மேற்கு வங்கத்தில் 331, கர்நாடகாவில் 253, தமிழ்நாட்டில் 189 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து தமிழ் செய்தி கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக