செவ்வாய், 3 ஜூன், 2025

இந்தியாவில் 4,000 பேருக்கு கொரோனா-32 பேர் பலி.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் ", இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி இதுவரை நாடு முழுவதும் 3,961 பேருக்கு தொற்று பாதித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி தமிழ்நாடு மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஜனவரி 1 முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. 

இவர்களில் பெரும்பாலானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது," எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா பரவலில் கேரளா, 1,435 பேருடன் முதலிடத்தில் உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 506, டெல்லியில் 483, குஜராத்தில் 338, மேற்கு வங்கத்தில் 331, கர்நாடகாவில் 253, தமிழ்நாட்டில் 189 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து தமிழ் செய்தி கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...