சுன்னாக காவல் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் காவற்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள், பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை சுன்னாக காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவற்துறையினர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக