இந்த ஊருக்குள்ளேயே உன்னை குடியிருக்கவே விடமாட்டேன் என்றார். அவரும் அவருடைய மகனும் சேர்ந்து தான் இந்த வேலியைப் போட்டார்கள்''
தன்னுடைய வீட்டுக்குச் செல்லும் வழியில் தெருவை மறித்து அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியின் முன்பாக நின்று கண்ணீர் விட்டு அழுகிறார்
முன்னாள் தூய்மைப் பணியாளரான சரோஜா.
பட்டியல் பிரிவைச் சேர்ந்த இவரின் வீட்டின் முன்பாக வீதியை மறித்து கம்பி வேலி போடப்பட்டு இருப்பதில், மற்றொரு சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி துணைத்தலைவரின் தலையீடு இருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதுகுறித்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு அதிகாரிகளிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பல மாதங்களாக அந்த வேலி அகற்றப்படாமல் இன்னும் அப்படியே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மூலனுார் அருகே கருப்பன்வலசு ஊராட்சிக்குட்பட்ட முளையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். அருகிலுள்ள சிறிய நகரமான மூலனுாரில் மூட்டை துாக்கும் தொழிலாளியாகவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக