அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து குறித்த போதைப்பொருளுடன் அபுதாபி சென்று அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளாா்.
அவர் கொண்டு சென்ற பொதியில் 3 போர்வைகளில் சுற்றி மறைத்து வைத்திருந்த குறித்த போதைப்பொருளுடன் அவா் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண்ணும் அவர் கொண்டு சென்ற போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக