வியாழன், 13 மார்ச், 2025

யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் கைப்பற்றுவோம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்துவதற்காக தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் உக்ரைனுக்கு 'தற்காலிக ஓய்வு' மட்டுமே!!

கிரெம்ளினின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ், அமெரிக்க முன்மொழிவு குறித்து கடந்த சில நிமிடங்களாகப் பேசி வருகிறார், இந்தத் திட்...