அவசர கால சேவைகளின்படி, ஒரு குழந்தையும் இரண்டு பெரியவர்களும் இந்த விபத்தில் தீவிரமான காயம் அடைந்துள்ளனர்.சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட காட்சிப்பதிவுகளில் விமானம் தலை கீழாக, அதாவது விமானத்தின் மேற்கூரை பனி சூழ்ந்த தரையில் விழுந்துள்ளது.
அதன் ஒரு இறக்கை காணாமலும் காட்சியளித்தது.
விபத்துக்குள்ளான விமானம், மினியாபோலிசிலிருந்து கிளம்பிய டெல்டா ஏர் லைன்ஸின் விமானம் என்று டொராண்டோ பியர்சன் விமான நிலையம் தெரிவித்தது. இதில் 4 விமான பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் உட்பட மொத்தம் 80 பேர் பயணித்துள்ளனர்.
மொத்தமாக பதினெட்டு பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வான் வழி ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமான ஆரஞ், மூன்று வான் வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களையும், இரண்டு தரை வழி ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் தீவிர காயங்கள் ஏற்பட்டவர்களில் ஒரு குழந்தை, 60களில் உள்ள ஒரு ஆண் மற்றும் தன்னுடைய 40களில் உள்ள பெண் ஒருவர் உள்ளதாக அது தெரிவித்தது.விபத்துக்குள்ளான விமானம் டெல்டா ஏர் லைன்ஸ் 4819, அதன் துணை நிறுவனமான எண்டேவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை மதியம் 2.15 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக டெல்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணித்தவர்களில் 22 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் சர்வதேச பயணிகள் என்றும் பிலிண்ட் தெரிவித்தார்.
விபத்து ஏற்பட்ட உடனே விமான நிலையம் மூடப்பட்டிருந்தாலும், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கிவிட்டதாக, விமான நிலையம் தெரிவித்தது.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்து குறித்து அனைத்து தரவுகளையும் சேகரிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் இன்னும் சில நாட்களுக்கு விசாரணைக்காக மூடி இருக்கும் என்றும் பயணிகள் விமானங்கள் சில தினங்களுக்கு தாமதத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
''எங்கள் விமானம் விபத்துக்குள்ளானது. அது தலைகீழாகக் கவிழ்ந்தது'' என்கிறார் அதில் பயணித்த ஜான் நெல்சன்.
'' பெரும்பாலோனோர் பாதுகாப்பாக உள்ளனர்.
நாங்கள் விமானத்திலிருந்து இறக்குகிறோம்'' என விபத்து நடந்த உடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறகு சிஎன்என் -க்கு அவர் அளித்த பேட்டியில்,'' நாங்கள் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டோம். பிறகு விமானம் கவிழ்ந்தது. ''என்றார் அவர்.
''நாங்கள் வௌவால்கள் போல விமானத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தோம்.'' என்கிறார் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய பீட்டர் கோவ்கோவ்.
'' சீட் பெல்டை அவிழ்த்து என்னால் இறங்க முடிந்தது.
சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர்.உதவிகள் தேவைப்பட்டது.'' என்கிறார் நெல்சன்.
பயணிகள் விரைவாக ஒரு குழுவாகச் செயல்பட்டதாக கார்ல்சன் கூறினார். "நான் பார்த்தது என்னவென்றால், அந்த விமானத்திலிருந்த அனைவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் எப்படி உதவுவது, ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் இருப்பது என நினைத்துச் செயல்பட்டனர்'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், கவிழ்ந்த விமானத்திலிருந்து மக்கள் வெளியே வருவதையும், தீயணைப்பு வீரர்கள் அதன் மீது நுரை (foam) தெளிப்பதையும் காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக