திங்கள், 16 செப்டம்பர், 2024

கல்கிஸ்ஸ-படோவிட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு.

கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் கல்கிஸ்ஸ - படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது.

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை மருத்துவமனை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று...