புதன், 25 செப்டம்பர், 2024

கொடைக்கானலில் திடீர் புவி பிளவு!!

கொடைக்கானல் அருகே குடிநீர் செல்லும் வாய்க்காலில் பிளவு ஏற்பட்டதால், புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றான கிளாவரை கிராமத்தில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாயம் செய்து வருகின்றனர். 

இந்த கிராமத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு உட்பட்ட செருப்பன் ஓடையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓடையில் வரும் குடிநீர் வாய்க்காலில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், உள்வாங்கில இருப்பதாகவும் 2 தினங்களுக்கு முன்பு வீடியோ வைரலானது. 

நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என கிராம மக்கள் அச்சமடைந்த நிலையில், நில அதிர்வு ஏற்படவில்லை என்று தெரிவித்த மாவட்ட நிர்வாகம், புவி பிளவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், புவியியல் துறை ஆய்வாளர் சுந்தர ராமன் உள்ளிட்ட அதிகாரிகள், எவ்வளவு தூரம் பிளவு ஏற்பட்டுள்ளது என்று அளவீடு செய்தனர். பிளவுக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஐரோப்பாவில் தீவிர மழைக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது!!

செப்டம்பரில் மத்திய ஐரோப்பாவைத் தாக்கிய தீவிர மழையின் வாய்ப்பை கிரக வெப்ப மாசுபாடு இரட்டிப்பாக்குகிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆஸ்...