மேலும் தாயகவாழ் மக்களின் நலனில், அரசியலில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை செலுத்தாத ௭ந்த செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அவர்களுக்கான ஆதரவினை விலக்கி கொள்ளுமாறும் ௭மது மக்கள் சமுகத்திடம் கோருவோம்.
எனவே எமது நோக்கத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆக்கபூர்வமாக கருத்துக்களை இங்கே பகிருமாறும் அடுத்தவர் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் போது ஆதாரபூர்வமாக இனத்தின் பொது நன்மைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் செயற்படுமாறு கேட்டுகொள்கிறோம். தமிழ் மக்கள் மத்தியில் இன்று அரங்கேற்றப்படும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும், செயற்பாட்டாளர்களிடைய ஏற்படுத்தப்படும் முரண்பாடுகளுக்கு தாங்களும் அறிந்தோ அறியமலோ துணைபோய் விடாமல் இருக்குமாறு வேண்டுகிறோம்.
ஒருவரின் நோக்கத்தை இன்னொருவரின் நோக்கம் ஒத்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கமுடியாது. நாம் ஒரு அணுகுமுறை ஊடாக ஒரு காரியத்தை சாதிக்க நினைக்கும் போது இன்னொருவர் இன்னொரு வழிமுறையூடாக அதே காரியத்தை சாதிக்கமுற்படலாம். அது அவரவர் தனிப்பட்ட புரிதல்களையும் பலம் பலவீனங்களையும் பொறுத்தே அமையும்.
அவ்வாறான வேளைகளில் ஏற்படுகின்ற குழப்பங்களை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தெளிவு பெறுவதற்கு அல்லது குழுவின் நிர்வாகிகளிடம் முறையிட்டு விளக்கம் கோரவும் முயற்சிப்பதே ஆரோக்கியமாகும்.
தனிப்பட்ட ஒருவருக்கு இருக்கிற ஒரு குழப்பத்தை நினைத்த மாத்திரத்தில் பொதுவெளியில் பகிர்வதன் ஊடாக இன்னும் நூறு பேரின் குழப்பத்திற்கு நாமே காரணமாகி விடுவோம். ஆகவே இனத்தின் நலனுக்கான பொது நன்மைக்காக எமக்குள் இருக்கும் சிறுசிறு தேவையற்ற முரண்பாடுகளை கடந்து ஒன்றாய் எழுவதற்கு அனைவரும் உழைப்போம்.
🙏🙏🙏 தமிழீழ மக்கள் செயல்நெறி குழுமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக