வெள்ளி, 26 ஏப்ரல், 2024

பிரித்தானியா வோல்சிங்கம் திருத்தல திருயாத்திரை மே 2024.

இம்முறை மே மாத வோல்சிங்கம் அன்னையின் திருத்தல யாத்திரையில் பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

முதலில் வருவோருக்கு முதலிடம் என்ற அடிப்படையில் முதலில் வரும் 2500 பேருக்கு திருத்தல வளாகத்தினுள் நடைபெறும் வழிபாடுகளில் பங்கெடுக்க அனுமதி வழங்கப்படுவார்கள். நண்பகல் 12 மணிக்கு பின்னர் வருகை தருபவர்கள் வழிபாடுகள் முடியும் வரை திருத்தல வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

ஏனையவர்கள் வயல் வெளிகளில் வரிசையில் நின்று மெழுகுவத்தி கொளு த்தவும் நேர்த்தி செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வரிசையில் நின்றவாறு திருப்பலி மற்றும் வழிபாடுகளை பெரிய திரைகளில் நீங்கள் காண்பதற்கு வசதியாக பெரிய திரைகள் வயல் வெளிகளில் நிறுவப்பட்டிருக்கும். வயல் வெளிகளில் வரிசையில் காத்திருக்கும் கத்தோலிக்கர்களுக்கு நற்கருணை வழங்கப்படும். 

அன்னையின் திருச்சுரூப ஆசீர்வாதத்தின் பின்னர் எல்லோருக்கும் அன்னையின் திருச்சுரூபத்தை தரிசிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். கார் மட்டும் வான்களில் வருபவர்களுக்கு முன்பதிவு தேவையில்லை. கோச் வண்டிகளில் வருபவர்கள் தமிழ் பணியகத்துடன் தொடர்பு கொண்டு உரிய அனுமதியை (பாஸ்) பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 நாங்கள் வழங்கும் பதாதையை உங்களது கோச் வண்டியின் முன் காட்சிப்படுத்தும்படி மிகத்தாழ்மையாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். வயோதிபர்கள் மட்டும் மாற்று வலுவுள்ளவர்கள் கோச் வண்டியில் வருகை தர இருந்தால் எமக்குத் தெரியப்படுத்தவும். காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை திருத்தலத்திற் கான நுழைவாயில் திறந்திருக்கும். திருச்சுரூப ஆசீரின் பின்னரே மீண்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

பிரதான வீதி பிற்பகல் 3.45 ற்கு மூடப்படும். அதன் பின்னர் எந்த வாகனமும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

 வழமை போல குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் போடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அனைவருக்கும் அன்னையின் பரிந்துரை நிறைவாக கிடைப்பதாக. 

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருநங்கைகள்.