வெள்ளி, 29 மார்ச், 2024

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

அநுராதபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்த இரண்டு கைதிகள் வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆதாரங்களின்படி, இருவரும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை கேண்டீனில் வேலை செய்து வந்தனர். 

இருவரும் தங்களின் சிறைச் சீருடைகளைக் களைந்துவிட்டு தப்பிச் செல்வதற்காக சிவிலியன் ஆடைகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அனுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கைதி முதலில் அனுராதபுரத்தில் உள்ள ஸ்ராவஸ்திபுரத்தையும் மற்றையவர் களனியையும் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொலிஸில் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் தேவையில்லை!

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும...