அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை காவல்துறை தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை ஓரிரு நாட்களுக்குள் எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதன், 30 ஜூலை, 2025
தமிழ்நாடு மருத்துவ படிப்பில் 25 மாணவர்கள்போலி சான்றிதழ் !!
சென்னை மருத்துவ படிப்பில் சேருவதற்கு போலி சான்றிதழ் கொடுத்த 25 மாணவர்கள் மீது விரைவில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
2025-2026 ஆம் ஆண்டிற்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதற்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 25ம் தேதி வெளியாகி இருந்தது. 25ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியான நிலையில் அப்போது 25 பேர் போலி சான்றிதழ் வழங்கியதாகவும் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த 25 பேருக்கு அடுத்த 3 ஆண்டுக்கு மருத்துவப்படிப்பு படிக்க முடியாத அளவிற்கு தகுதி நீக்கம் செய்வதாகவும், ஓரிரு நாட்களுக்குள் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் தரப்பிலிருந்து எடுக்கப்படும் எனவும், 25 பேரின் விவரம் எந்த முறையில் அவர்கள் போலி சான்றிதழ் வழங்கி உள்ளனர் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு விதமான போலி சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
NRI என்ற கோட்டாவில் போலி இருப்பிட சான்றிதழ், போலி பிறப்பு சான்று, தூதரகத்திலிருந்து போலி சான்றிதழ் வழங்குவது போன்ற பல்வேறு வகையிலான சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும். அதை எந்தெந்த மாணவர்கள் எந்தெந்த போலி சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள் என்பது குறித்தான முழு விவரத்துடன் இருக்கக்கூடிய தகவலினை காவல்துறை ஆணையருக்கு வழங்க உள்ளனர்.
சனி, 26 ஜூலை, 2025
இலங்கை வர 40 நாடுகளுக்கான விசா கட்டணம் இல்லை!!
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் நாற்பது நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு அளித்து ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
விசா கொள்கையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் இலங்கையின் சுற்றுலா மீட்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கொள்கை மாற்றம் நாட்டின் பொருளாதாரத்தையும் தூண்டியது.
இந்த விசா கொள்கை மாற்றம் கலாச்சார பரிமாற்றத்தை அதிகரிக்க சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசா கட்டணத்தை தள்ளுபடி செய்யும் நாடுகளில் ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பெலாரஸ் மற்றும் பல நாடுகள் அடங்கும்.
இது அதன் சர்வதேச நிலையை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதான அணுகலை உருவாக்கவும், சுற்றுலா மற்றும் சர்வதேச உறவுகளை அதிகரிக்கவும் நாட்டின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 42 விசா இல்லாத இடங்களுக்கான அணுகலுடன், இலங்கை உலகளாவிய விசா குறியீட்டில் 91வது இடத்தில் உள்ளது. இது நாட்டை பயணிகளுக்கு ஒப்பீட்டளவில் சாதகமான நிலையில் வைக்கிறது.
விசா இல்லாத இடங்கள் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா தேவையில்லாமல் ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கின்றன.
இலங்கைக்கு விசா இல்லாத நுழைவு பெறும் நாடுகளின் பட்டியல்:
1. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியம்
2. ஜெர்மனி கூட்டாட்சி குடியரசு
3. நெதர்லாந்து இராச்சியம்
4. பெல்ஜியம் இராச்சியம்
5. ஸ்பெயின் இராச்சியம்
6. ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த்
7. போலந்து குடியரசு
8. கஜகஸ்தான் குடியரசு
9. சவுதி அரேபியா இராச்சியம்
10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
11. நேபாள கூட்டாட்சி ஜனநாயக குடியரசு
12. சீன மக்கள் குடியரசு *
13. இந்திய குடியரசு *
14. இந்தோனேசியா குடியரசு *
15. ரஷ்ய கூட்டமைப்பு *
16. தாய்லாந்து இராச்சியம் *
17. மலாயா கூட்டமைப்பு *
18. ஜப்பான் *
19. பிரான்ஸ் குடியரசு
20. அமெரிக்கா
21. கனடா
22. செக் குடியரசு (செக்கியா)
23. இத்தாலி குடியரசு
24. சுவிஸ் கூட்டமைப்பு (சுவிட்சர்லாந்து)
25. ஆஸ்திரியா குடியரசு
26. இஸ்ரேல் குடியரசு
27. பெலாரஸ் குடியரசு
28. ஈரான் இஸ்லாமிய குடியரசு
29. ஸ்வீடன் இராச்சியம்
30. பின்லாந்து குடியரசு
31. டென்மார்க் இராச்சியம்
32. கொரியா குடியரசு
33. கத்தார் மாநிலம்
34. ஓமன் சுல்தானகம்
35. பஹ்ரைன் இராச்சியம்
36. நியூசிலாந்து
37. குவைத் மாநிலம்
38. நோர்வே இராச்சியம்
39. துருக்கி குடியரசு
40. பாகிஸ்தான்
வியாழன், 24 ஜூலை, 2025
மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றது!!
தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது. என யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ் கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (23.07.25) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
எமது வரலாற்று தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.
தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.
யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை . மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது.
ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளது. காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டுவருகிறது.
ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில்கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள்.
மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது.
தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது,
அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது.
மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் கிடைத்து வருகிறது.
எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Thank You Google

Thanks
என்னைப் பற்றி
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்தது 2009 மே 17 ஆம் திகதி என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, ...