வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அந்தப் படகில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த படகில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விபத்துக்குள்ளான படகைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 (Mi-17) ஹெலிகொப்டர் ஒன்றும் பெல் 412 (Bell 412) விமானம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக