சனி, 15 ஆகஸ்ட், 2026

இந்தோனேசியா 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை (2026 ஓகஸ்ட் 15) அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அடுத்தடுத்துப் பல தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. 

 இந்தோனேசியாவின் மத்திய தீவுப் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் மேலும் 3 சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக இந்தோனேசியப் பிராந்தியப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு பின்னர் கடல் மட்டத்தில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படவில்லை என அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. “தற்போதைய தகவல்களின்படி, இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உயிரிழப்புகளும் கட்டிட இடிபாடுகளும் பதிவாகியுள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந் நிலநடுக்கத்தினால் இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை எனவும், கரையோர மக்கள் அச்சமடையத் தேவையின்றி இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks