அனைத்து துறையிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வருவாய்த் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய் மக்களுக்கு உரையாற்றினார்.கோட்டை கொத்தளத்தில் என்னை தேசியக்கொடி ஏற்றி வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து துறையிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வருவாய்த்துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்திட உறுதியேற்போம். உங்க அண்ணை, உங்க தம்பியை, உங்க பிள்ளையை ஜெயிக்க வச்சி முதல்வர் ஆக்கிட்டீங்க..
அதனால் உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள். இனிமேல்தான் நீங்கள் என் கூடவே இருக்கனும். உறுதியாக நம்ம அரசோட கூட இருக்கனும். அப்போதுதான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக