சனி, 15 ஆகஸ்ட், 2026

சீனாவின் ‘பறக்கும் ரயில் 5 விநாடிகளில் 800 கி.மீ. வேகம்!!

சீனா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்தச் சாதனையால் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எதிர்காலத்தில் பயண நேரங்கள் வெகுவாகக் குறையக்கூடும். பொதுவாக, விமானங்கள்தான் அதிவேகப் போக்குவரத்து சாதனங்களாக உள்ளன. 

இதனால் அவசரமாக வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் விமானப் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஆனால், விமானப் பயணக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை எப்போதும் சாத்தியமாக இருப்பதில்லை.

இந்நிலையில், விமானத்தின் வேகத்தையே மிஞ்சும் அளவுக்கு ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அதனைச் சாத்தியமாக்கும் முயற்சியில் சீனா முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஃபு சோதனை மையத்தில் ‘மேக்லெவ்’ அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனையின் முடிவில், சுமார் 1.1 மெட்ரிக் டன் எடை கொண்ட சோதனை வாகனம் வெறும் 5 விநாடிகளுக்குள் மணிக்கு 800 கி.மீ. வேகத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் முக்கியமான சோதனைச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks