வியாழன், 2 ஜூலை, 2026

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 இது அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அதிமுக கட்சி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருவதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சட்டமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாக பிரிந்து செயல்பட்டனர். 

பின்னர், அவர்களுக்கு தவெகவில் அமைச்சர் பதவி கிடைக்காததால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்தாலும், அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செயல்பட மறுத்து வருகிறார்கள். 

 இதில் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

 இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய அதிமுக எம்எல்ஏக்களுமான சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 2 பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்.சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகியோர் தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தனர். இவர்களுடன் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks