வெள்ளி, 31 ஜூலை, 2026

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் உள்பட 630 போலீசாருக்கு பதக்கம்.

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணியை சிறப்பித்து கவுரவிக்கும் வகையில் குடியரசு தலைவர் பதக்கம், ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம், முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு 630 பேருக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல்வர் விஜய் ராஜரத்தினம் மைதானம் வந்த போது, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் விஜய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறையின் பேண்டு வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து குதிரைப்படை, தீயணைப்புதுறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு சிங்கப்பெண் சிறப்பு படை, சிறைத்துறை, கமாண்டோ படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். 

பிறகு அகாஷ் ஜோசி ஐபிஎஸ் தலைமையில் நடந்த அலங்கார அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks