கடந்த 2011-ஆம் ஆண்டு அரங்கேறிய இக்கொடூரக் கடத்தல் சம்பவம் தொடர்பான ஆள்கொணர்வு மனு (Habeas Corpus), நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் திரட்டிப் பாரிய போராட்டமொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனை முன்னின்று ஒழுங்கமைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அதற்கு முதல் நாள் (டிசம்பர் 9) யாழ். ஆவரங்கால் பகுதியில் வைத்து மர்மமான முறையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக