ஞாயிறு, 21 ஜூன், 2026

வெல்லம்பிட்டியவில் பேக்கரி தீ விபத்து!!

வெல்லம்பிட்டி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பேக்கரியில் இன்று மாலை 4.45 மணியளவிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை. சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks