திங்கள், 29 ஜூன், 2026

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. 

28 துறைகளின் செயல்திட்டங்கள், வெற்றி தமிழகம் திட்டம் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். IAS, IPS அதிகாரிகள் மாநாடு இன்றும் நாளையும் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகளுடனான மாநாடு 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது. 

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்து கொள்கின்றனர்.

இந்த அமர்வில் முதலில் சட்டம் ஒழுங்கு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks