திங்கள், 29 ஜூன், 2026
யாழ். போதனா வைத்தியசாலையில் 300 மில்லியன் ரூபாயில் அதிநவீன “கத் லாப்!!
யாழ். போதனா மருத்துவமனையில் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இதய ஆய்வகம் (Cath Lab )சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது..
யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அதிநவீன வசதியை வடமாகாண மக்களின் பயன்பாட்டிற்காக நாடா வெட்டி திறந்து வைத்தார். இதய நோய்களை மிகத்துல்லியமாகக் கண்டறியவும், சிக்கலான அறுவை சிகிச்சைகள் ஏதுமின்றி நவீன முறையில் இதய நோய்களைக் குணப்படுத்தவும் இந்த “கத் லாப்” பரிசோதனைக்கூடம் பெரிதும் உதவவுள்ளது.தனியார் வைத்தியசாலைகளில் பெருமளவிலான பணத்தைச் செலவழித்து மேற்கொள்ளப்படும் இத்தகைய சிகிச்சைகளை, இனிவரும் காலங்களில் வடமாகாண மக்கள் தமது பிரதேசத்திலேயே இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் மிக முக்கிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த உயர்மட்ட நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ச. சிறிபவனந்தராசா, க. இளங்குமரன், ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலி...
-
யாழில் (Jaffna) தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அதனை கிழித்து தனது காரில் எடுத்த...
-
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், பிரிட்டன் மீண்டும் அந்த அமைப்பில் இணைவதை ஆதரிப்பதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக